மக்களுக்காக மாநில வரியை குறைத்த கேரளா: பெட்ரோல், டீசல் விலை ரூ. 1 குறைப்பு

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி நிர்ணயித்து வரும் நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. 

16 நாட்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.42-க்கு இன்று விற்கப்படுகிறது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு ரூ. 73.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எரிபொருள் மீதான மாநில அரசு வரியை கேரளா குறைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. 

கடந்த நவம்பர் 2017 நிலவரப்படி, டீசல் மீது 24.52 சதவீதமும், பெட்ரோல் மீது 31.8 சதவீதம் வரியும் கேரளா வசூல் செய்கிறது. இவை போக கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரியும் கேரளாவில் வசூலிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் எரிபொருட்கள் வரி மூலம் கேரள அரசு ரூ 7,795 கோடியை வருவாயை ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...