நீலகிரி: ஊதிய உயர்வு கோரி நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வங்கி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: ஊதிய உயர்வு கோரி நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வங்கி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் உதகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த போலீசார், இங்கு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசார், இங்குப் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தில் போராட்டத்தை தொடருமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பிய வண்ணம் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டனர். ஆனால், மீண்டும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தனித்தனியாகச் செல்லுமாறும், கோஷங்களை எழுப்பினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஸ்டேட் வங்கி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, திருப்பூரில் உள்ள வங்கிகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் பொதுமக்கள், பணிக்கு செல்பவர்கள், வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். முறையான ஏற்பாடுகள் செய்யாதது குறித்தும் அவர்கள் குறை கூறினர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளில் 3,000-த்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரம் கோடி அளவிலான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் உதகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த போலீசார், இங்கு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசார், இங்குப் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தில் போராட்டத்தை தொடருமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பிய வண்ணம் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டனர். ஆனால், மீண்டும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தனித்தனியாகச் செல்லுமாறும், கோஷங்களை எழுப்பினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஸ்டேட் வங்கி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, திருப்பூரில் உள்ள வங்கிகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் பொதுமக்கள், பணிக்கு செல்பவர்கள், வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். முறையான ஏற்பாடுகள் செய்யாதது குறித்தும் அவர்கள் குறை கூறினர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளில் 3,000-த்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரம் கோடி அளவிலான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.