அன்னூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியாம்பாளையம் பிரிவு முதல் அன்னூர் மேட்டுப்பாளையம் வரை சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் அளவு கற்களை நடும் பணி நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலான நிலங்கள் விவசாய பூமிகளாகும். தங்களது நிலங்களை சாலைப்பணிக்காக எடுத்துக் கொள்வது குறித்து தங்களிடம் கருத்து கேட்பு கூட்டமோ அல்லது எவ்வித முன்னறிப்பு நோட்டீசோ கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் எங்களது விவசாய நிலங்களை விட்டுத்தர இயலாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அன்னூர் பகுதி விவசாயத்தைக் காக்கும் வகையில் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், புறவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக மேம்பாலங்கள் கட்டுவதன் சாலை இணைப்பு பணியை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...