வால்பாறையில் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை தாய்முடி எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களின் பழைய நினைவுகளைப் போற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் சரோஜினி, பார்வதி, சத்தியசெல்வம், தங்கராஜ் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சரோஜினி பேசியதாவது :- அன்று என்னிடம் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், போலீஸ் மற்றும் மத்திய, மாநில பணிகளில் இருப்பது எனக்கு பெருமையளிக்கிறது. தற்போது, பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவது கவலை அளிக்கிறது. இதனை சரி செய்ய அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும், என்றார்.

இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு நினைவுப் பரிசாக கேடயத்தை முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...