வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை தாய்முடி எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களின் பழைய நினைவுகளைப் போற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் சரோஜினி, பார்வதி, சத்தியசெல்வம், தங்கராஜ் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சரோஜினி பேசியதாவது :- அன்று என்னிடம் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், போலீஸ் மற்றும் மத்திய, மாநில பணிகளில் இருப்பது எனக்கு பெருமையளிக்கிறது. தற்போது, பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவது கவலை அளிக்கிறது. இதனை சரி செய்ய அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும், என்றார்.
இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு நினைவுப் பரிசாக கேடயத்தை முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
வால்பாறை தாய்முடி எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களின் பழைய நினைவுகளைப் போற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் சரோஜினி, பார்வதி, சத்தியசெல்வம், தங்கராஜ் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சரோஜினி பேசியதாவது :- அன்று என்னிடம் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், போலீஸ் மற்றும் மத்திய, மாநில பணிகளில் இருப்பது எனக்கு பெருமையளிக்கிறது. தற்போது, பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவது கவலை அளிக்கிறது. இதனை சரி செய்ய அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும், என்றார்.
இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு நினைவுப் பரிசாக கேடயத்தை முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது.