பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் ஆட்சியர்: மாவட்ட அளவில் கோவைக்கு 3-வது இடம்

கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று வெளியிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் முதல்முறையாக 11-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 35,085 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதினர். இதில் 14,521 மாணவர்களும், 19,226 மாணவிகளும் என மொத்தம் 3,3747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 111 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 103 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.2 சதவீதமாகும். மேலும், தேர்வில் ஏதேனும் பாடப்பிரிவுகளில் தவறிய மாணவர்களும், கல்லூரியைப் போல தாங்கள் 12-ம் வகுப்பிற்கு செல்லுவதற்கு ஏதுவாக உடனடித் தனித்தேர்வின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 88.61% தேர்ச்சி.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளின் அடிப்படையில் பிளஸ் -1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.80 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. எஞ்சிய பள்ளிகளின் விபரம் பின்வருமாறு :-

1. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் - 98.80 சதவீதம் தேர்ச்சி

2. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி - 97.37 சதவீதம் தேர்ச்சி

3. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,ஆர்.எஸ்.புரம் (மேற்கு) - 97.24 சதவீதம் தேர்ச்சி

4. மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 96.74 சதவீதம் தேர்ச்சி

5. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரத்தினபுரி - 96.49 சதவீதம் தேர்ச்சி

6. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் - 92.52 சதவீதம் தேர்ச்சி

7. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் - 88.64 சதவீதம் தேர்ச்சி

8. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை - 88.46 சதவீதம் தேர்ச்சி

9. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி - 85.71 சதவீதம் தேர்ச்சி

10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு - 79.75 சதவீதம் தேர்ச்சி

11. மாநகராட்சி பா. கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி - 77.88 சதவீதம் தேர்ச்சி

12. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் - 77.88 சதவீதம் தேர்ச்சி

13. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் - 71.67 சதவீதம் தேர்ச்சி

14. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையாம்பாளையம் - 71.64 சதவீதம் தேர்ச்சி

15. மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி - 71.07 சதவீதம் தேர்ச்சி

16. நகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் - 65.75 சதவீதம் தேர்ச்சி

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 639

தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை: 1,337

தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை: 1,976

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 477

தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை: 1,274

தேர்ச்சி பெற்ற மாண, மாணவியரின் எண்ணிக்கை: 1,753

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்: 74.64

மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்: 95.28

மொத்த தேர்ச்சி சதவீதம்: 88.61

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...