நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் முதல்முறையாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், நீலகிரி மாவட்டத்தில் 92.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7,360 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 6,800 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதிய 3,299 மாணவர்களில் 2,905 பேரும், 4,061 மாணவிகளில் 3,895 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.91 சதவீமும், மாணவர்கள் 88.06 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.