துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10,000 மும் நிதி உதவி வழங்கினார்.

தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அ.தி.மு.க.,வை தி.மு.க.,வும், தி.மு.க.,வை அ.தி.மு.க.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது, என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...