தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10,000 மும் நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அ.தி.மு.க.,வை தி.மு.க.,வும், தி.மு.க.,வை அ.தி.மு.க.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது, என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10,000 மும் நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அ.தி.மு.க.,வை தி.மு.க.,வும், தி.மு.க.,வை அ.தி.மு.க.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது, என்றார்.