வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 9 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த வீடுகளில் வசித்து வந்த குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகுமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இத்தீவிபத்தில் உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குக்கர், வாளி, அரிசி காய்கறி, மளிகைப் பொருட்கள், சேலை, வேட்டி மற்றும் ரூ. 5,000-ம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை ஒன்றிய செயலாளர் சாந்தலிங்க குமார், வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 9 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த வீடுகளில் வசித்து வந்த குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகுமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இத்தீவிபத்தில் உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குக்கர், வாளி, அரிசி காய்கறி, மளிகைப் பொருட்கள், சேலை, வேட்டி மற்றும் ரூ. 5,000-ம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை ஒன்றிய செயலாளர் சாந்தலிங்க குமார், வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
