சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாய், மகன் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

வீரபாண்டி பகுதி தோட்டத்து தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. நெசவு தொழிலாளியான இவர், அவரது தாயார் பார்வதியை அழைத்துக் கொண்டு கண் பரிசோதனை செய்வதற்காகச் சென்றுள்ளார். திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் இருவர் மீதும் மோதியது. 

இந்த விபத்தில் அழகர்சாமியின் உயிர் பிரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...