திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீரபாண்டி பகுதி தோட்டத்து தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. நெசவு தொழிலாளியான இவர், அவரது தாயார் பார்வதியை அழைத்துக் கொண்டு கண் பரிசோதனை செய்வதற்காகச் சென்றுள்ளார். திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் இருவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் அழகர்சாமியின் உயிர் பிரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி பகுதி தோட்டத்து தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. நெசவு தொழிலாளியான இவர், அவரது தாயார் பார்வதியை அழைத்துக் கொண்டு கண் பரிசோதனை செய்வதற்காகச் சென்றுள்ளார். திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் இருவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் அழகர்சாமியின் உயிர் பிரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.