கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக இருக்கின்றார். பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி, குனியமுத்தூர் பகுதியில் 'மல்லிகா நர்சிங் ஹோம்' என்ற பெயரில் தனியாக மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90,51,269 அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து, பேராசிரியர் இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.