நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையானது, கேரளாவில் ஒருதினத்திற்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரி தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை சவாரியை எதிர்பார்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது தொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், "பருவமழை துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழையின் போது யானை சவாரி ரத்து செய்ய வேண்டியுள்ளது. பருவமழை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலசூழலை பொறுத்து நடக்கும்," என்றனர்.
தென்மேற்கு பருவமழையானது, கேரளாவில் ஒருதினத்திற்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரி தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை சவாரியை எதிர்பார்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது தொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், "பருவமழை துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழையின் போது யானை சவாரி ரத்து செய்ய வேண்டியுள்ளது. பருவமழை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலசூழலை பொறுத்து நடக்கும்," என்றனர்.