தொடர் மழையால் முதுமலை யானை சவாரி தற்காலிக ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது, கேரளாவில் ஒருதினத்திற்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரி தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

மேலும், தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை சவாரியை எதிர்பார்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



இது தொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், "பருவமழை துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழையின் போது யானை சவாரி ரத்து செய்ய வேண்டியுள்ளது. பருவமழை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலசூழலை பொறுத்து நடக்கும்," என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...