பிளஸ்-2 படித்தவர்களும் இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேரலாம்

இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர பிளஸ்-2 படித்திருந்தாலே போதும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..!


இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர பிளஸ்-2 படித்திருந்தாலே போதும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..!

இளம் வயது முதல் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவற்றில் சேர்ந்து நாட்டிற்காகப் போராட வேண்டும் என பலரும் கனவு கண்டு இருப்பார்கள். இதற்காக அவர்கள் பள்ளி வயதில் இருந்தே உடல் அளவிலும், மனதளவிலும் ஆயத்தமாகியிருப்பார்கள். ஆனால், இந்தக் கனவுகளை பட்டப்படிப்பு படித்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பது பொதுவாக சாதாரண மனிதனிடம் பிரதிபலிக்கும் எண்ணமாகும். இந்த சூழலில், பட்டப்படிப்பை முடிக்காமல், பிளஸ்-2 படித்தவர்களும் இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேருவதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதை மறந்துவிடுகின்றனர். 



பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இந்திய பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் கப்பற்படையில் இணைந்து பணியாற்றுவதற்காக யு.பி.எஸ்.சி. (UPSC) சார்பில் ஆண்டுதோறும் 2 முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாட்டின் மிக முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ஒருமுறையும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் 2-வது முறையாகவும் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மே மாதம் என்பதால், முதல்கட்டத் தேர்வு முடிந்துவிட்டது. 2-வது கட்டத் தேர்வுக்கான விண்ணப்பம் வரும் ஜுன் 6-ம் தேதி முதல் ஜுலை 2-ம் தேதி வரை விநியோகிக்கப்பட இருக்கிறது. 

இந்தத் தேர்வை எழுத விரும்புவோர், இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் வழியில் பிளஸ்-2 தேர்வை முடித்திருக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.பி. (SSB) அடிப்படையிலான நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் தேர்வாகுபவர்களுக்கு புனேவில் 3 ஆண்டுகள் கூட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து, விமானப் படையில் சேர விரும்புபவர்களுக்கு ஐதரபாத் விமானப் படை தளத்திலும், கடற்படையில் சேர விரும்புபவர்களுக்கு கேரளாவிலும் ஓராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...