கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கைப்பாவையாக அ.தி.மு.க., அரசு செயல்படுகின்றது. சட்டவிரோதமாக சிவில் ஆடையில் இருந்த போலீசார் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த போலீசாரே தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது.
ஹிட்லர் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மேல் பழி போட்டது போல, தமிழக போலீசார் செயல்படுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசாக உள்ளது.
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும், தூத்துக்குடியில் அந்த ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம். கட்சி கொடி இல்லாமல் போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்கடிக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்தது. இதை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் பணம் வாங்கிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியினர் ம.தி.மு.க.,வை பற்றியும், என்னைப் பற்றியும் அவதூறு பேசி வருகின்றனர். ரூ. 52 கோடி பணம் வாங்கி விட்டதாக பிரபல டி.வி.க்களின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், எனக் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கைப்பாவையாக அ.தி.மு.க., அரசு செயல்படுகின்றது. சட்டவிரோதமாக சிவில் ஆடையில் இருந்த போலீசார் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த போலீசாரே தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது.
ஹிட்லர் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மேல் பழி போட்டது போல, தமிழக போலீசார் செயல்படுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசாக உள்ளது.
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும், தூத்துக்குடியில் அந்த ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம். கட்சி கொடி இல்லாமல் போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்கடிக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்தது. இதை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் பணம் வாங்கிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியினர் ம.தி.மு.க.,வை பற்றியும், என்னைப் பற்றியும் அவதூறு பேசி வருகின்றனர். ரூ. 52 கோடி பணம் வாங்கி விட்டதாக பிரபல டி.வி.க்களின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், எனக் கூறினார்.