சேலம்-ஓமலூர் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போத்தீஸ் கடையின் திறப்பு விழா கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, அந்த கடையின் முன்புறம் இருந்த 5-க்கு மேற்பட்ட மரங்களை போத்தீஸ் நிர்வாகம் வெட்டி அகற்றியது.
சேலம்-ஓமலூர் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போத்தீஸ் கடையின் திறப்பு விழா கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, அந்த கடையின் முன்புறம் இருந்த 5-க்கு மேற்பட்ட மரங்களை போத்தீஸ் நிர்வாகம் வெட்டி அகற்றியது.

இது தொடர்பாக, சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் போத்தீஸ் நிர்வாகம் எந்தவித அனுமதியும் இன்றி மரங்களை வெட்டி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும், இரவோடு-இரவாக வேர் பகுதி கூட தெரியாத அளவுக்கு அந்த நிறுவனம் மரங்களை முற்றிலுமாக அளித்து விட்டதாகவும், இதற்கு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக, வருவாய்துறை அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், மரத்தை வெட்டிய போத்தீஸ் நிர்வாகத்துக்கு அபராதம் விதிப்பதாகக் கூறினார்.
ஐந்து மரக்கன்று
தொடர்ந்து, மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் பியூஸ் மானுஸ் ஐந்து மரக்கன்றுகளை நடவு செய்தார். அந்த மரக்கன்றுகளை எந்த காரணத்தை கொண்டும் போத்தீஸ் நிர்வாகம் அகற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மரங்களை அனுமதியின்றி வெட்டிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக 'தனி ஒருவனாக' குரல் கொடுத்த பியூஸ் மானுஸ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இது தொடர்பாக, சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் போத்தீஸ் நிர்வாகம் எந்தவித அனுமதியும் இன்றி மரங்களை வெட்டி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும், இரவோடு-இரவாக வேர் பகுதி கூட தெரியாத அளவுக்கு அந்த நிறுவனம் மரங்களை முற்றிலுமாக அளித்து விட்டதாகவும், இதற்கு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக, வருவாய்துறை அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், மரத்தை வெட்டிய போத்தீஸ் நிர்வாகத்துக்கு அபராதம் விதிப்பதாகக் கூறினார்.
ஐந்து மரக்கன்று
தொடர்ந்து, மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் பியூஸ் மானுஸ் ஐந்து மரக்கன்றுகளை நடவு செய்தார். அந்த மரக்கன்றுகளை எந்த காரணத்தை கொண்டும் போத்தீஸ் நிர்வாகம் அகற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மரங்களை அனுமதியின்றி வெட்டிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக 'தனி ஒருவனாக' குரல் கொடுத்த பியூஸ் மானுஸ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.