நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, கோத்தகிரி அரவேனு பெப்பேன் பகுதியில் கரடி குட்டியுடன் நடமாடி வருவதாக வெளியானத் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். இந்த நிலையில், தேயிலை தோட்டத்திற்குள் திடீரென குட்டியுடன் உலா வந்த கரடியைஙக கண்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஒட்டம் பிடித்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், கரடியைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டம் அருகே கூண்டு வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கும் வரை தேயிலை பறிக்கச் செல்வதில்லை என தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.