கோத்தகிரியில் தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடி : தலைதெறிக்க ஓடிய தொழிலாளர்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 



இதனிடையே, கோத்தகிரி அரவேனு பெப்பேன் பகுதியில் கரடி குட்டியுடன் நடமாடி வருவதாக வெளியானத் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். இந்த நிலையில், தேயிலை தோட்டத்திற்குள் திடீரென குட்டியுடன் உலா வந்த கரடியைஙக கண்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஒட்டம் பிடித்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், கரடியைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டம் அருகே கூண்டு வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கும் வரை தேயிலை பறிக்கச் செல்வதில்லை என தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...