சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது.
இதையடுத்து, புருசோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், 1,2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதனை மீறி வீட்டுப்பாடம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும், பாடத்திட்டங்களை அமைக்கும் போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும். கவுன்சில் பரிந்துரைத்த பாடங்களை மட்டுமே தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கு நடத்த வேண்டும், எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது.
இதையடுத்து, புருசோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், 1,2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதனை மீறி வீட்டுப்பாடம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும், பாடத்திட்டங்களை அமைக்கும் போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும். கவுன்சில் பரிந்துரைத்த பாடங்களை மட்டுமே தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கு நடத்த வேண்டும், எனத் தெரிவித்தார்.