நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் மண்ணின் மைந்தர்களாகக் கருதப்படும் தோடர் இன மக்கள் வனம் சார்ந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். முந்தைய கால கட்டத்தில் மந்து என்று கூறப்படும் இவர்களின் வாழ்விடங்கள் சுமார் 165-ஆக இருந்தன. ஆனால், தற்போது அவை குறைந்து 65 மந்துகளில் மட்டுமே இவர்கள் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு மந்துகளிலும் இவர்களின் வழிப்பாட்டிற்கு அரை வட்ட வடிவிலான ஆபுல் எனப்படும் கோரை புற்களாலும், மூங்கில் ஓடை குச்சிகளாலும் கொண்டு இந்த கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோவில்கள் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதற்கான இத்தகைய புதுப்பிக்கப்படும் நிகழ்ச்சி உதகையை அடுத்த் பகல் கோடு மந்தில் நடைபெற்றது.
இதற்கான ஆபுல் மற்றும் மூங்கில் ஓடை குச்சிகளை நெடுந்தொலைவில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில் இருந்து சேகரித்தும் முதுமலை வனப் பகுதியில் இருந்து மூங்கில்கள் இவற்றைக் கொண்டு கோவில்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தோடர் இன ஆண்கள் மட்டுமே கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு முடித்தனர்.

பின்னர் கோவிலுக்குள் பால், தயிர், வெண்ணெய் எடுத்தும் மூங்கில் மத்து, நெய் விளக்கு போன்றவற்றை தோடர் இன பூசாரிகள் பூஜைக்காக கோவிலில் வைத்தனர். இங்கு வேறு சிலைகளோ அல்லது மலர் மாலைகளோ கிடையாது. அனைத்து மந்துகளில் இருந்தும் வந்திருந்த தோடர்கள் கடவுளுக்கு நன்றி கூறிய பின் இவர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் கோவில் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றது.