தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து விவரம் :-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :-மக்களின் எண்ணப்படியே ஆலையை மூட அரசாணை பிறக்கப்பட்டது. இனி தூத்துக்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ :- நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தாலும் ஆலையை திறக்க விடமாட்டோம்.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் :- அரசாணையை வரவேற்கிறேன். ஆலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். இனி நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் ஆலையை திறக்க அனுமதி கூடாது.
மக்கள் நீதி மையம் நடிகர் கமல் : ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து :- ஆலையை மூட எடுத்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும், எனக் கூறினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து விவரம் :-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :-மக்களின் எண்ணப்படியே ஆலையை மூட அரசாணை பிறக்கப்பட்டது. இனி தூத்துக்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ :- நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தாலும் ஆலையை திறக்க விடமாட்டோம்.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் :- அரசாணையை வரவேற்கிறேன். ஆலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். இனி நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் ஆலையை திறக்க அனுமதி கூடாது.
மக்கள் நீதி மையம் நடிகர் கமல் : ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து :- ஆலையை மூட எடுத்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும், எனக் கூறினர்.