தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை வேண்டும் : கல்கி சுப்ரமணியம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க காவல்நிலையங்களில் நீதிபதிகள் சோதனை நடத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க காவல்நிலையங்களில் நீதிபதிகள் சோதனை நடத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். 



கோவை வானவில் கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இக்கூட்டணியைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியம் பேசுகையில், "கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது வரை அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வைத்துதான் 13 பேர் எனத் தெரிய வருகிறது. எனவே, இது தொடர்பாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள் முன்னிலையில் உடனே விசாரணை நடத்தப்பட வேண்டும்.



காணாமல் போனவர்களை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட காவல்நிலையங்களில் நீதிபதிகள் உடனே சோதனை நடத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்," என்றார். 

மேலும், தூத்துக்குடியில் இருக்கும் பிற மாவட்ட போலீசாரை உடனே வெளியேற்ற வேண்டும் எனக் கூறிய அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக அதிகாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...