பாரம்பரிய கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு கற்றுத்தரும் மனிதநேயமிக்க தலைமை ஆசிரியர்

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே சமயத்தில், சங்கமம் கலைக்குழுவின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். கிராமிய கலைகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் கிராமிய கலைகளைக் கற்றுக்கொண்டார். அதன்பின், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இக்கலையின் மீது ஆர்வத்தைத் தூண்டவும் 2010-ம் ஆண்டு சங்கமம் கலைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். 



அச்சங்கம் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக 850 கிராமிய கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கனகராஜ் கூறுகையில், "இந்தக் கலை மூலமாக நல்ல பழக்கங்களையும், நல்ல உறவையும் கொண்டு வர முடியும். 



இந்தக் கலையை கற்றுக்கொண்டால் மன உளைச்சல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாட்டுபாவடை, வேட்டி போன்றவை இக்கலையில் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய உடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் வரும்.

இறைவழிபாடு செய்து வணக்கம் வைத்து தொடங்கப்படுவதால், இக்கலையைப் பயின்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். சாதி, மதம் என இன வேறுபாடின்றி இக்கலையை மக்கள் கற்றுக்கொள்வதால், சமத்துவம் மக்களிடையே உருவாகிறது. சமூக பிரச்சனைகளை மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகிறது. கல்வி பாடத்திட்டத்தில் இக்கலை குறித்து பாடம் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இவரிடம் ஒயிலாட்டத்தைக் கற்றுக்கொண்ட 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் வரை 80 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒயிலாட்டத்தை அரங்கேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...