உயிரைப் பொருட்படுத்தாத ஆபத்தான குளியல் : கட்டுப்பாடுகளை விதிக்குமா மாவட்ட நிர்வாகம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 



வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...