வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.