திருப்பூர்: மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர்.
குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர்.
குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.