குளத்தை காணோம்...! : வடிவேலு பட பாணியில் திருப்பூரில் புகார்

திருப்பூர்: மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது. 

அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர். 

குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...