சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகிறது.
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
நாளை மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். cbse.examresults.net, results.nic.in/index, cbseresults.nic.in, results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
நாளை மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். cbse.examresults.net, results.nic.in/index, cbseresults.nic.in, results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.