திருச்சிக்கு செல்லும் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

கோவை: கரூர் - திருச்சி இடையே உள்ள ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக திருச்சிக்கு செல்லும் ரயில்களின் நேரம் 29-ம் தேதி மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோவை: கரூர் - திருச்சி இடையே உள்ள ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக திருச்சிக்கு செல்லும் ரயில்களின் நேரம் 29-ம் தேதி மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், குளித்தலை - பேட்டவைதலை இடையே உள்ள ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக திருச்சி செல்லும் ரயில்களின் நேரம் ஒருதினத்திற்கு (மே 29) மட்டும் மாற்றியமைக்கப்பட்டது.

இதன் காரணமாக, ரயில் எண் (56712) பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் திருப்பூர் - கரூர் பகுதிகளில் சுமார் 135 நிமிடம் நிறுத்தப்படும். இதனால், திருச்சிக்கு 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக ரயில் சென்றடையும்.

இதேபோல, ரயில் எண் (56713) திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயிலானது, மதியம் 1.00 மணிக்கு பதிலாக 2.00 மணிக்கு திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், முத்தரசனல்லூர் மற்றும் பேட்டவைதலை இடையே சுமார் 25 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...