தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.
தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 144 தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் அந்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 144 தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் அந்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.