திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில், "மக்களுக்கு தொடர்ந்து பாதகம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஆலை மூடப்படும் என்ற நம்பிக்கையை தூத்துக்குடி மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆலையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தோல்வியை காட்டுகிறது. முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தவறை தமிழக அரசு கேட்காத பட்சத்தில் வருகின்ற காலத்தில் தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில், "மக்களுக்கு தொடர்ந்து பாதகம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஆலை மூடப்படும் என்ற நம்பிக்கையை தூத்துக்குடி மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆலையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தோல்வியை காட்டுகிறது. முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தவறை தமிழக அரசு கேட்காத பட்சத்தில் வருகின்ற காலத்தில் தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றார்.