தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்- ஜி.கே.வாசன்

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது கூறுகையில், "மக்களுக்கு தொடர்ந்து பாதகம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஆலை மூடப்படும் என்ற நம்பிக்கையை தூத்துக்குடி மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆலையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தோல்வியை காட்டுகிறது. முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தவறை தமிழக அரசு கேட்காத பட்சத்தில் வருகின்ற காலத்தில் தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...