மேட்டுப்பாளையம் வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஹெலிக்காப்டர் மூலம் வானில் வட்டமிட்டு பறந்தபடி இயற்கை அழகை ரசிக்க அழைப்பு விடுத்து நேற்று முதல் அதற்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருபது நிமிடங்கள் பறந்தபடி மேட்டுப்பாளையம் பகுதியினை மேலிருந்து பார்த்து ரசிக்க நபர் ஒருவருக்கு ரூபாய் நான்காயிரம் என்ற கட்டணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முதல் நாளான நேற்று பலரும் ஆர்வமுடன் இதில் பயணித்த நிலையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இப்பகுதி காடுகளின் மேலே ஹெலிக்காப்டர் பறந்து செல்லத் தடை விதித்து நோட்டிஸ் வழங்கினர். வனத்தின் இயற்கை அழகை காணும் வகையில் காடுகளை ஒட்டி பயணிகளோடு ஹெலிக்காப்டர் தாழ்வாக பறப்பதால் இதன் பெரும் சப்தத்தில் வன உயிரினங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இங்குள்ள யானைகளின் வழித்தட பாதை மற்றும் ஆற்றங்கரையோரத்தின் மேலே ஹெலிக்காப்டர் பறந்தால் யானைகள் திசை மாறி ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும், மனித-விலங்குகள் மோதல்கள் அதிகம் நிகழும் மேட்டுப்பாளையம் பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், தடையை மீறி வனப் பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ    ஹெலிகாப்டரை இயக்கினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...