காது கேளாத வடமாநில பெண்ணிற்கு மீண்டும் கேட்கும் திறன்: கோவை மருத்துவமனை சாதனை

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சம்பாதே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் திறனை இழந்த இவர், காதில் ஹியரிங் எய்டு கருவியைப் பயன்படுத்தி வந்தார். தனது பிரச்சனைக்கு உள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், ஏதும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள விக்ரம் இ.என்.டி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அதிநவீன கருவிகளின் மூலம், LUMENIS CO2 LASER மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஒரே நாளில் மீண்டும் கேட்கும் திறனைப் பெற்றார். ஹியரிங் எய்டு கருவியுடன் சிரமப்பட்டு வந்த அந்தப் பெண், தற்போது காது கேட்கும் தைரியத்துடன் வேலையிலும், சமூகத்திலும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது.



குறட்டை பிரச்சனை உள்ளோருக்கும் கோப்லாஷன் தொழில்நுட்ப மற்றும் ரேடியோப்ரீக்வன்சி தொழில்நுட்பம் வாழ்க்கையின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. மூக்கடைப்பு, மூச்சு பிரச்சனைகள் இந்தத் தொழில்நுட்பங்களால் சிறப்பாக சரி செய்யப்படுகிறது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...