தமிழகத்தில் மே 28-ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...