கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.