நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
குன்னூர், உதகை இடையே உள்ள வெலிங்டனில் கடந்த 16-ம் தேதி இந்த முகமானது, மெட்ராஸ் ராணுவப்படை மையம் சார்பில் நடத்தப்பட்டது. நேற்று வரை நடைபெற்ற இந்த முகாமில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 110 குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, சாகச விளையாட்டுக்கான பாறை ஏறுதல், குதிரை சவாரி, துப்பாக்கிச்சுடுதல், மலையேறுதல் மற்றும் படகுசவாரி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அருவங்காடு பகுதியைச் சேர்ந்த ஜகதலா கிராமப் பகுதிகளி மற்றும் 'லிட்டில் சிஸ்டர்' என்ற முதியோர் இல்லத்தையும் தூய்மை செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வெலிங்டன் பகுதியில் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
