கோவை: 2018-19-ம் ஆண்டுக்கான தனிநபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: 2018-19-ம் ஆண்டுக்கான தனிநபர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய 2018-19-ம் ஆண்டுக்கான சிறப்பு கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தனிநபர் கடன் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டம், கறவை மாடுகள் வாங்கக் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் ஆகியவற்றில் பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
மேற்படி வட்டி, கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும், அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய 2018-19-ம் ஆண்டுக்கான சிறப்பு கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தனிநபர் கடன் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டம், கறவை மாடுகள் வாங்கக் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் ஆகியவற்றில் பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
மேற்படி வட்டி, கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும், அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.