நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.
தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கர்நாடகா மாநில கலைக் குழுவினரின், தொள்ளு குனிதா நடனத்துடன் இரண்டு நாள் நடக்கும் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. இதனை தொழில் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தொடங்கி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவையொட்டி இடம் பெற்றுள்ள கண்காட்சியில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பலதரப்பட்ட தேயிலை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இருதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் என பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாகக் கருதப்படும் தேயிலைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும் தேயிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

இதில், தேயிலை வாரியம், இன்கோ சர்வ் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகள் மற்றும் அதிக தேயிலை தூளை விற்பனை செய்த தொழிற்சாலைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்தத் தேயிலை சுற்றுலா விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கர்நாடகா மாநில கலைக் குழுவினரின், தொள்ளு குனிதா நடனத்துடன் இரண்டு நாள் நடக்கும் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. இதனை தொழில் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தொடங்கி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவையொட்டி இடம் பெற்றுள்ள கண்காட்சியில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பலதரப்பட்ட தேயிலை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இருதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் என பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாகக் கருதப்படும் தேயிலைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும் தேயிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

இதில், தேயிலை வாரியம், இன்கோ சர்வ் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகள் மற்றும் அதிக தேயிலை தூளை விற்பனை செய்த தொழிற்சாலைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்தத் தேயிலை சுற்றுலா விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
