கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.