பயணி மறந்து விட்டுச்சென்ற விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.



இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...