சமுதாய முன்னேற்றத்தில் தனிநபரின் பங்கு மிகவும் முக்கியம்: கடற்படை தளபதி லன்பா

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:- உங்கள் வாழ்வை பலர் உருவாக்கியதைப் போன்று, நீங்கள் பிறரிடம் அன்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழவில்லையெனில், அது வாழ்க்கையல்ல என அன்னை தெரசா கூறியதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.



மாணவர்கள் இன்று இருக்கும் சுற்றுச்சூழல் நிந்தரமானது என எண்ணிவிடக் கூடாது. வாழ்க்கை என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக முதியவர்களுக்கு உதவுவதோடு நீங்கள் பெற்ற கல்வியறிவையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஹென்றி லாரன்ஸ் இப்பள்ளியை துவக்கிய காலம் முதல் பாதுகாப்பு துறைக்கும், இப்பள்ளிக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இது மேலும் வளரும் என நம்புகிறேன். இப்பள்ளியில் படித்த பலர் வெண்ணிற ஆடை அணிந்து கடற்படையில் பணிபுரிவது எனக்கு பெருமையாக உள்ளது.



வரும் காலங்களில் உங்களில் பலர் பாதுகாப்பு படைக்கு சேருவீர்கள் என நான் நம்புகிறேன், என்றார்.

இறுதியாக, விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சுழற்கேடயங்களையும் அவர் வழங்கினார். பள்ளி தலைவர் தேசிராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...