கோவை: கோவை குட்கா வழக்கு விவகாரத்தில் ஜாமீன் பெற்றிருந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.
கோவை: கோவை குட்கா வழக்கு விவகாரத்தில் ஜாமீன் பெற்றிருந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.
கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, சூலூர் காவல்நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கிக் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, சூலூர் காவல்நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கிக் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.