மேட்டுப்பாளையத்தில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு தொடக்கம்: இயற்கையின் அழகை 'ஈகிள் வியூ' பார்வையில் கண்டுரசிக்க பொதுமக்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாகச விளையாட்டு கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், பங்கேற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளம் வயதினருக்கு, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் மனதில் உள்ள தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கி, மனவலிமை கொண்டவர்களாக எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற இது போன்ற சாகச விளையாட்டுக்கள் உதவும் என நம்பப்படுகிறது. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறை காலங்களிலும் பலூன் மூலம் குறிப்பிட்ட உயரம் வரை வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விளையாட்டு பூங்கா [பிளாக் தண்டர்] மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த சாகச விளையாட்டு இந்திய விமானப் படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே சீரான சீதோசனம் மற்றும் அளவான காற்று வீசும் பகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே ஆண்டுதோறும் பலூன் திருவிழா மற்றும் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாக துறைச் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுவதால், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்று இயற்கையின் அழகை ஈகிள் வியூ எனப்படும் கழுகுப் பார்வையில் காண சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...