கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.
கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.
சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது.
இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது.
இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.