60-வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கியது

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.



குன்னுார் சிம்ஸ்பூங்காவில் 60-வது ஆண்டு பழக்கண்காட்சி இன்று தொடங்கி நாளை நிறைவு பெறுகிறது. நுழைவாயிலில் 60-வது பழக்கண்காட்சி என்ற வடிவமைப்பு 12 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



பூங்காவினுள் ஒரு மெட்ரி டன் எடை கொண்ட கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளால் உருவாக்கப்பட்ட 9 அடியில் யானை, 6 அடியில் குட்டியானை சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி, மேடை அரங்கு அருகே சுற்றுலா பயணிகள் அனைவரும், 'செல்பி' எடுக்கும் வகையில் பழங்களால் ஆன ரங்கோலி வடிவமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டன் வரையில் திராட்சை, பலா, பப்ளிமஸ், ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 



கன்னியாகுமரி, திருச்சி, கடலுார், திருப்பூர், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், இன்கோசர்வ், டான்டீ, தேன் விற்பனை, ரோஜா அரங்கு மற்றும் மகளிர் குழுக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



மேலும், 2,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட சால்வியா, பெகோனியா, பால்சம், ஜின்னியா உட்பட பல்வேறு வண்ண மலர்களும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 60-வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பி. செல்வராஜ் தொடங்கி வைத்தார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...