தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை ஆரம்பம்

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையின் முக்கிய சுற்றுலாப்பகுதியான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.



இதேபோல, இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலா வந்தவர்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர். மழைக் காரணமாக அவர்கள் குடில்களின் கீழேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 42 மி.மீ., கூடலூர் பகுதியில் 41 மி.மீ, கின்னக்கொரை பகுதியில் 20 மி.மீ., மற்றும் உதகையில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 232 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...