தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவக்கூடாது எனக் கருதிய தமிழக அரசு, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது. மேலும், இந்தத் தடையானது 5 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் இப்போது இணைய சேவை முடக்கமானது பெரும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
எனவே, இணையசேவை முடக்கத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள், வணிக நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இணையசேவை முடக்கத்திற்கான காரணம் என்ன..? என கேள்வியை எழுப்பியது. இதையடுத்து, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இணையசேவை நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை அனுப்பி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவக்கூடாது எனக் கருதிய தமிழக அரசு, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது. மேலும், இந்தத் தடையானது 5 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் இப்போது இணைய சேவை முடக்கமானது பெரும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
எனவே, இணையசேவை முடக்கத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள், வணிக நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இணையசேவை முடக்கத்திற்கான காரணம் என்ன..? என கேள்வியை எழுப்பியது. இதையடுத்து, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இணையசேவை நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை அனுப்பி உள்ளது.