கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதலில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பா.ஜ.க.,வின் எடியூரப்பா, பெரும்பான்மை பலம் இல்லாததால், பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

ஆட்சி அமைக்க 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 117 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால் எதிர்பார்த்தப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி எளிதில் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பின்போது பா.ஜ.க., வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பின்போது எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை.

தற்போது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உயரும். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. மூன்று தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் பலம் 107 ஆக மட்டுமே உயரும். எனவே, குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...