திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு கவுன்சில் சார்பில் நலிவடைந்தது வரும் பனியன் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவிலான புதிய ஆடை வடிவமைப்புகளை ஏற்றுமதியாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கேயம் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் ஒய்யாரமாக போஸ் கொடுத்தனர். இதனை திரளானோர் கண்டு ரசித்தனர்.