முடங்கியது தொழில்நகரமான திருப்பூர் : ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதோடு, அங்குள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரின்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. அதேபோல, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

மாவட்டம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூரில் நூறு சதவீத கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் 80 சதவீதம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...