தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் : பெரும்பாலான கடைகள் அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சி சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் 75 ஆயிரம் ஆட்டோக்கள் உட்பட தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோக்களும் ஓடாது என தொழிற்சங்கங்கள்  கூறியுள்ளன.  மேலும், குமரியில் நாட்டுப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,000 படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

எதிர்கட்சியினர், பந்த் அறிவித்தாலும், மக்கள் பாதிக்காத வகையில், பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்கள் போக்குவரத்திலும் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் எவ்வித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...