கோவை பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது

கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.


கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

2016-2017-ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்கான உறவில் சிறந்து விளங்கிய நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், இணக்கமான தொழில்துறைகளை வளர்ப்பதற்கு புதுமையான அணுகுமுறைகள், மனித இழப்புகள் தவிர்த்தல், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு சிறந்த நிறுவனத்திற்கான தேர்வு நடைபெற்றது.

கடைசியில், 14 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் வழங்கினார்.

விருது பெற்றது தொடர்பாக பிரிக்கால் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறுகையில், "தொழிலாளர்களிடையே முற்போக்கு சிந்தனை மற்றும் கடின உழைப்பை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறந்த நிர்வாகம், தொழிலாளர்களின் கடின உழைப்பே இந்த விருதை வெல்ல முக்கியக் காரணம். எனவே, எங்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடின உழைப்புகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...