கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டு குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது குறித்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, செல்வ சிந்தாமணி குளத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி கன்சல்டன்சியைச் சார்ந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணன், ராக் அமைப்பின் ரவீந்திரன் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, குளங்களில் இருந்து நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் விரைவில் சரி செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
