கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டு குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு  அமைப்பின் சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது குறித்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில்  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, செல்வ சிந்தாமணி  குளத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.



இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி கன்சல்டன்சியைச் சார்ந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணன், ராக் அமைப்பின் ரவீந்திரன் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, குளங்களில் இருந்து நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் விரைவில் சரி செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...