ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை : உரிமையாளர் அனில் அகர்வால்

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, மாவட்டமே போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன என்று ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது :- ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயக்க நீதிமன்றம், மத்திய மாநில அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தூத்துக்குடி மக்களின் நலன், விருப்பத்தின் பேரில் ஆலையை இயக்க விரும்புகிறேன். தூத்துக்குடி சம்பவம் மனதிற்கு வலியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள. மேலும், சட்டங்களுக்கு உட்பட்டு ஆலையை இயக்கப்படும். சுற்றுசூழல் பாதிக்காத வகையில் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...