தூத்துக்குடியில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம் : அதிரடிப் படையினர் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 3-வது நாளாக இன்றும் பதற்றமான உச்சநிலையை எட்டியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் தொடர்ந்து மாவட்டத்தின் பதற்றநிலை குறையாமல் உள்ளது. தூத்துக்குடியில் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், முத்தம்மாள் காலனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும், தெருக்களில் உள்ள டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அண்ணாநகர் பிரதான சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தடுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

எனவே, தூத்துக்குடி அண்ணா நகரில் பதற்றத்தை குறைக்கும் வகையில் திருச்சி சரக ஐ.ஜி., வரதராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட, ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அணிவகுப்பு நடத்தினர். வஜ்ரா வாகனமும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...