கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆர்.எஸ்.புரத்தை அடுத்துள்ள தடாகம் பிரதான சாலையில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் இன்று காலை திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் குடிநீர் வெளியேறி சாலையை ஆக்கிரமித்தது. சாலையின் இருபுறமும் தண்ணீர் குட்டை போல் தேங்கியதால் குறுகிய இடத்தில் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

இதனால் தடாகம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மேட்டுப்பாளையம் சாலையை நோக்கி திரும்பின. இதனால் மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. பின்னர் தடாகம் சாலைக்கு வந்த காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
இதனை தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.