நீலகிரி: கோடை விழாவை முன்னிட்டு உதகையில் இன்று ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டது.
நீலகிரி: கோடை விழாவை முன்னிட்டு உதகையில் இன்று ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

தொன்மை வாய்ந்த பழங்குடியினர் கலைகளை பேணி காப்பதோடு, ஓவியக் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கோடை விழா ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று உதகையில் நடைபெற்றது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் பழமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள், அண்மை கால ஓவியங்கள், பல்வேறு கடவுள்களின் திருவுருவங்கள், தலைவர்களின் ஓவியங்கள், இயற்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உட்பட பல தரப்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் இன பழங்குடி மக்கள் மண் பாண்டம் செய்வது, தோடர் இன. பழங்குடி மக்களின் பூத்து குளி போர்வைகள் உட்பட பல தரப் பட்ட அரிய படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

கோடை விழாவையொட்டி உதகை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 4-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக இதன் அமைப்பாளர் முரளி கண்ணன் கூறினார்.


தொன்மை வாய்ந்த பழங்குடியினர் கலைகளை பேணி காப்பதோடு, ஓவியக் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கோடை விழா ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று உதகையில் நடைபெற்றது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் பழமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள், அண்மை கால ஓவியங்கள், பல்வேறு கடவுள்களின் திருவுருவங்கள், தலைவர்களின் ஓவியங்கள், இயற்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உட்பட பல தரப்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் இன பழங்குடி மக்கள் மண் பாண்டம் செய்வது, தோடர் இன. பழங்குடி மக்களின் பூத்து குளி போர்வைகள் உட்பட பல தரப் பட்ட அரிய படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

கோடை விழாவையொட்டி உதகை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 4-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக இதன் அமைப்பாளர் முரளி கண்ணன் கூறினார்.
